எம்.ஜி.ஆருக்கு இயற்கையாகவே ஏழு எண் ராசியாக அமைந்தது.
அவர் பிறந்த நாள் 17-01-1917,
மதுரை பாய்ஸ் ஒரிஜினல் நாடக கம்பெனியில் சேர்ந்த போது வயது 7,
அவர் கதாநாயகனாக நடித்தப்படம் ராஜகுமாரி வெளிவந்த ஆண்டு 1947,
அவர் கட்சித் தொடங்கிய நாள் அக்டோபர் 17,
அவர் முதல்வராக பதவி ஏற்ற ஆண்டு 1977,
அவர் மறைந்த ஆண்டு 1987, அப்போது அவரின் வயது 70.
(இத்தகவல்கள் ஏழையின் சிரிப்பில் எம்.ஜி.ஆர் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.)
Thursday, October 23, 2008
எம்.ஜி.ஆரும் ஏழும்
Thursday, September 25, 2008
காதல் என்பது எது வரை?
கவிஞன் எதை காதலிக்கிறானோ, அதையெல்லாம் பாடுவான். ஒரு ஜெர்மானியக் கவிஞருக்கு தன்னோட மனைவி மேல காதல். தினம் நூறு வரில ஒரு கவிதை எழுதிடுவாரு. திடீர்னு ஒரு நாள் மனைவி இறந்துட்டாங்க. ஆனா அவர் தினசரி கவிதை எழுதறதை மட்டும் நிறுத்தலை. எழுதிட்டே இருந்தாரு. எழுதறதை தினம் மனைவி கல்லறையில கொண்டு போய் பாடிப் போட்ருவாரு. ஒருநாள், ஒரு மாசம் இல்லை. கிட்டத்தட்ட 44 வருடத்துக்கு இப்படி எழுதிட்டே இருந்த அவர் பேரு 'கார்ல் வில் ஹெல்ம்' நம்ம காதலிக்கிற ஆள் நமக்கு கிடைச்சாலும் சரி, கிடைக்கலைன்னாலும் சரி... கூட இருந்தாலும் சரி, இல்லேன்னாலும் சரி. நாம இருக்குற வரைக்கும் இருக்கிறதுக்கு பேர்தான் காதல்!
வீட்டு வரவேற்பறையில் எழுதி வைக்க
'பேசத் தகுந்த மனிதர் கிடைத்து, நீங்கள் பேசத் தவறினால், ஒரு தகுதியான மனிதரை இழந்து விட்டீர்கள். பேசத் தகுதியில்லாத மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தால், நீங்கள் உங்களையே இழந்து விட்டீர்கள் !'
கொஞ்சம் நீளமாக இருந்தாலும், வரவேற்பறைக்கு வர்றவங்களுக்கும் சரி உங்களுக்கும் சரி உபயோகமாக இருக்கும்.
Monday, September 15, 2008
திட்டம்
ஆயிரமாயிரம் மாலை
நேரங்கள் ஏதேதோ
பேசினோமே... வெட்டியாக
திட்டமிட்டுருக்கலாமே - அன்பே
ஒரு வேளை நாம் பிரிந்துவிட்டால்
எப்படி ஒருவரை ஒருவர் மறப்பது என்று
Monday, September 8, 2008
காதல் ஒரு மறதியா?
ஒரே நாளில்
எதிர்ப்பட்ட அழகியின்
முகம் மறந்துபோகலாம்
ஒரே வாரத்தில்
ரயில் சிநேகிதியின்
முகம் மறந்துபோகலாம்
ஒரே மாதத்தில்
கல்லூரித் தோழியின்
முகம் மறந்துபோகலாம்
ஒரே வருடத்தில்
பள்ளித் தோழியின்
முகம் மறந்துபோகலாம் - ஆனால்
எத்தனை யுகம் போனால்
உன் முகம் எனக்கு
மறந்துபோகும் என்னுயிரே!
Thursday, September 4, 2008
காதல் ஒரு முடிவு
கொல்
அல்லால்
எனைக் கொள்
கொல்லாது
கொள்வாயோ?
என் அன்பே
கொள்
அல்லால்
எனைக் கொல்
கொள்ளாது
கொல்வாயோ?
என் உயி(ரை)ரே
Saturday, August 23, 2008
கொஞ்சல்
நேரங்கழித்து வந்தாலும்
கோபிக்கிறாய்
நேரத்தோடு வந்தாலும்
கோபிக்கிறாய்
பரிசு வாங்கித் தந்தாலும்
கோபிக்கிறாய்
பரிசு வாங்காமல் வந்தாலும்
கோபிக்கிறாய்
பாடச் சொன்னாலும்
கோபிக்கிறாய்
பாடச் சொல்லாவிட்டாலும்
கோபிக்கிறாய்
வரவா என்று கேட்டாலும்
கோபிக்கிறாய்
அப்படிக் கேட்காவிட்டாலும்
கோபிக்கிறாய்
போகிறேன் என்றாலும்
கோபிக்கிறாய்
போகவில்லை என்றாலும்
கோபிக்கிறாய்
ஓ...
புரிந்துபோய்விட்டது!
நான் எப்போதும்
உன்முன்
கெஞ்சிக் கெஞ்சி...
உன்னை
இழுத்து இழுத்து...
அணைத்து அணைத்து...
முத்தமிட்டு முத்தமிட்டு...
செல்லம் செல்லம்
என்று
கொஞ்சிக்கொண்டே
இருக்க வேண்டும்
அப்படித்தானே?
அடடே
சிரிப்பைப் பாரு!!!
Friday, August 22, 2008
இதயமாற்றம்
உனக்கு அன்று
நல்லவனும் நானே!
உனக்கு இன்று
கெட்டவனும் நானே!
எனக்கு அன்று
நல்லவளும் நீயே!
எனக்கு இன்று
கெட்டவளும் நீயே!
அடடா!!!
இப்படி மாறிய
இந்த நாட்கள்
எல்லாம் - உன்
இதயத்தின்
நிறமாற்றம்
தந்த புதிய
ரணக் கோலம்தானே?
Thursday, July 24, 2008
உனக்காகவே
நீ சொன்ன 'பொய்கள்' பிடித்திருந்தது - ஆனால்
'பொய்யை' மட்டுமே சொன்னாயே !
அதுதான் பிடிக்கவில்லை
என் நெஞ்சக் கூட்டுக்குள்
உனக்கான இடம் இன்னமும்
பத்திரமாகத்தான் இருக்கிறது
நீதான் உனக்கான உணர்வையும்
ஏரியூட்டிப் போய் விட்டாய் - ஆனாலும்
எஞ்சிய சாம்பலிலும்
உனக்கான என் சுவாசம்
மிதமான வெப்பத்துடன்...
Tuesday, July 8, 2008
சத்தியம்
நாம் சந்தித்து விட்டுப் பிரியும் நேரம்
திரும்பிப் பார்க்கும் போதெல்லாம்
அழுகை வருகிறதென்றாய் - அன்று
முதல் திரும்பிப் பார்ப்பதில்லையென
சத்தியம் செய்து விட்டுப் பிரிந்தோம்
மறையும் கடைசி நொடியில் - நீ
பார்க்க மாட்டாயென நானும்
நான் பார்க்க மாட்டேன் என நீயும்
ஒன்றாய் திரும்பிப் பார்க்க
செய்த சத்தியம் எங்கேப் போனதென
சத்தியமாய் தெரியவில்லை
முட்டை உடையறதால குஞ்சு வெளியே வருதா..? இல்லை குஞ்சு வர்றதால முட்டை உடையுதா?
முதலில் கோழி வந்ததா முட்டை வந்ததா என்ற கேள்வி மாதிரி இதுவும் நல்லா இருக்கே! ஆனால் இதுக்குப் பதில் சொல்ல முடியுமே.. குஞ்சுதான் முட்டையை உடைத்து வெளியே வரும். முட்டை தானாக உடையாது. இதுக்காக குஞ்சுகளின் அலகில் 'எக் டூத்' என்ற முட்டை பல்லும் கழுத்தில் 'ஹேட்சிங் மஸில்' எனப்படும் முட்டையை உடைப்பதற்கான தசையும் இருக்கும். குஞ்சு வெளியே வர தயாரானதும் உள்ளிருந்தே தன் கூர்மையான முட்டைப் பல்லால் ஓட்டை போடத் தொடங்கும். கொஞ்சம் உடைந்ததும் கழுத்தில் இருக்கும் தசையால் உடைந்த பகுதியை உந்தித் கள்ளி கொஞ்சம் கொஞசமாக வெளியே வந்த சில நாட்களில் இந்த முட்டைப் பல்லும் தசையும் மறைந்துவிடும்.
Saturday, June 28, 2008
எது தவறு
நான் என் காதலை
சொன்னவிதம் தாறா இல்லை
நான் உன்னை காதலித்ததே தவறா
தெரியவில்லை உன்னை என்னால்
ஒரு நொடியில் மறக்க முடியும்-ஆனால்
அந்த ஒரு நொடி என் வாழ்நாளில் என்றுமே இல்லை
Wednesday, June 25, 2008
ராட்டில் ஸ்நேக்
பல வகை பாம்புகள் தங்கள் வாலை உயர்த்தி அசைக்கும் பழக்கம் உடையவை. ஆனால் 'ராட்டில் ஸ்நேக்' மட்டும் வால் பகுதியை அசைக்கும் போது ஒருவித வித்தியாசமான ஒலி எழுப்பும். இதன் வால் பகுதி கிலுகிலுப்பை போன்ற அமைப்பில் இருக்கும். வாலை அசைத்து ஒலி எழுப்பும் ஒரே பாம்பு 'ராட்டில் ஸ்நேக்' தான்!.
மரங்கொத்தி
மரங்கொத்தி எவ்வளவு வேகமாக மரத்தைக் கொத்தினாலும் அவற்றின் மூளைக்கு பாதிப்பு வராததற்குக் காரணம் அதன் அலகுக்கும் மண்டை ஓட்டுக்கும் இடையே பஞ்சு போன்ற ஒரு அமைப்பு இருப்பதுதான். இந்த அமைப்பு மரங்கொத்தியின் அலகு கொத்துவதால் ஏற்படும் அதிர்வுகளை உள்வாங்கிக்கொள்ளும். அதோடு இவற்றின் மண்டை ஓடு கெட்டியாக இருந்தாலும் பஞ்சு போலவே இருக்கும். மற்ற பறவைகளின் மூளையை விட மரங்கொத்தியின் மூளை சிறியது. இப்படி வல காரணங்களால் மரங்கொத்தி நொடிக்கு 20 தடவைக்கு மேல் கொத்தினாலும் அவற்றுக்கு சின்ன தலைவலி கூட ஏற்படுவது இல்லை.
Tuesday, June 24, 2008
நிவாரணம்
உனக்கு ஓர் கடிதம் எழுத வேண்டுமென்றுதான்
முதன் முதலாய் கிறுக்கினேன்
காதல் கடிதம் என்கிற பெயரில்
கடிதத்தை ஏற்க மறுத்தாய்
கடிதம் கவிதையாகி இன்று வரை
தொடர்கிறது உனக்கும் எனக்குமான
நிரந்தரப் பிரிவை சரிசெய்யும் இடைக்கால நிவாரணமாய்...!
Saturday, June 21, 2008
கவிதை
நான் எழுதியவை
அனைத்தும் வெறும்
வார்த்தைகள் தான்
என்றாவது இதை-நீ
படிக்க நேர்ந்தால் ஒருவேளை
கவிதையாகலாம்...!
Friday, June 20, 2008
இந்தியாவின் புகழ்மிக்க இடங்கள்
ஆரோவில்: புதுச்சேரி அருகில் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்தின் உதவியுடன் அமைந்துள்ள சர்வதேச கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
பிலாய்: மத்தியப்பிரதேசத்தில் உள்ளது. இங்கு இந்தியாவின் மிகப்பெரிய இரும்பு உருக்காலை உள்ளது.
புலந் தர்வாஸா: ஃபதேப்பூர் சிக்ரி கோட்டையின் உயரமான வாசல் இது. தக்காணத்தின் வெற்றியைக் கொண்டாட அக்பரால் கட்டப்பட்டது.
ஃபரிதாபாத்: டெல்லிக்கு அருகில் தொழிற்கூடங்கள் நிறைந்த நகரம்.
சாராநாத்: இங்குதான் புத்தர் தனது ஞானக்கொள்கைகளை முதன்முதலாக மக்களுக்குப் போதித்தார்.
சாந்திநிகேதன்: இது மேற்கு வங்காளத்தில் உள்ளது. தாகூரின் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் இங்கு உள்ளது.
தும்பா: இந்தியாவின் விண்வெளி தலம். திருவனந்தபுரம் அருகே உள்ளது.
ஸ்ரீஹரிகோட்ட: ஆந்திராவில் உள்ளது. இந்திய செயற்கைக்கோள் விண்வெளியில் ஏவப்படும் இடம்.
மகாபலிபுரம்: சென்னைக்கு அருகே உள்ளது. இங்கு பல்லவர் கால சிற்பங்கள் அழியா புகழ் பெற்று விளங்குகின்றன.
Thursday, June 19, 2008
அச்சுக்கலை எனும் அதிசயம்
அச்சுக்கலை எங்கே.. எப்போது.. எப்படி.. தோன்றியது தெரியுமா?! 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனர்கள் காகிதம் தயாரிக்கும் முறையை கண்டறிந்தனர்.ஆரம்பத்தில் காகிதத்தில் அச்சு அடிப்பது மரக்கட்டைகளால்தான். அச்சு எழுத்துக்கள் கண்டுப்பிடிப்பதற்கு முன் புத்தகங்கள் கையால் எழுதப்பட்டன. பிறகு தாமிரத் தகடுகளில் உருவங்களை 'எட்ச்-என்கிரேவ்' செய்யும் முறைகள் உருவாயின. அந்தத் தகடுகளில் மைபூசப்பட்டு அதன் மீது காகிதத்தை வைத்து அழுத்தி பிரதிகள் எடுக்கப்பட்டது.
Wednesday, June 18, 2008
அறிந்து கொள்வோம்
'ஆண் பொருநை' என அழைக்கப்படும் நதி அமராவதி.
'கராத்தே' என்றால் வெறும் கை என்று பொருள்.
முதலையால் ஓர் இரும்பு ஆணியைக்கூட ஜீரணித்து விட முடியும்.
'சிறு மதுரை' என அழைக்கப்படும் ஊர் 'கீழச்சிவல்பட்டி'.
அமைதிக்கான நோபல் பரிசை அதிகம்பெற்ற நாடு அமெரிக்கா.
அமெரிக்காவில் 'ஹாலிவுட்' என்ற பெயரில் பத்து நகரங்கள் உள்ளன.
விளையாட்டுகளும் கோப்பைகளும்
டேவிஸ் கோப்பை - லான் டென்னிஸ்
டர்பி - குதிரை பந்தையம்
கிராண்ட் பிரிக்ஸ் கோப்பை - ஓட்டம்
ஜீல்ஸ்ரிமெட் கோப்பை - உலக கால்பந்து ஆட்டம்
பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கோப்பை - கோல்ஃப்
தாமஸ் - உலக புப்பந்தாட்டம்
வெஸ்ட்செஸ்டர் கோப்பை - போலோ
விம்பிள்டன் - லான் டென்னிஸ்
அகில இந்திய மகாராஜா ரஞ்சித்சிங் தங்கக் கோப்பை - ஹாக்கி
பர்துவான் கோப்பை - பளு தூக்கும் போட்டி
ராதா மோகள் கோப்பை - போலோ விளையாட்டு
ரஞ்சிக்கோப்பை - கிரிக்கெட்
சந்தோஷ் கோப்பை - கால்பந்தாட்டம்
ராணி ஜான்சி கோப்பை - மகளிர் கிரிக்கெட்
வெலிங்டன் கோப்பை - படகுப் போட்டி
Monday, June 16, 2008
பூமி தினம்
பூமி தினம் 1969-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இத்தினத்தை ஏழை பணக்கார நாடுகள் என்னும் வித்தியாசமில்லாமல் அனைத்து நாடுகளும் அனுசரித்து கொண்டிருக்கின்றன.கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 25 நாடுகளில் முற்றிலும் காடுகள் அழிக்கப்பட்டு விட்டன என வனமேம்பாட்டுக்கான உலக கமிஷன் தெரிவித்துள்ளது.இரண்டாம் உலகப் போருக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளி விவரக் கணக்குப்படி உலகில் 6 ஆயிரம் கோடி ஹெக்டேர் பரப்பளவிற்கும் குறைவாக இருக்கிறது.இதற்கு காரணம் மனிதனின் பயன்பாட்டிற்காக மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருப்பதேயாகும்.மேலும் காடுகள் அழிக்கப்படுவதால் அதிக அளவில் மனிதர்களுக்கு எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு உருவாவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதால் தான் எச்.ஐ.வி., கிருமிகள் உருவாகிறது.
Friday, June 13, 2008
ஒல்லியான கட்டடம்
ஜெபல் ஹஃபீப் மலைச்சாலை
அறிந்து கொள்வோம்
* மனிதனின் வாழ்நாள் முழுவதும் வளரும் உறுப்பு காது ஆகும்.
* பி.பி.சி.யின் விரிவாக்கம் 'பிரிட்டிஷ் பிராட் காஸ்டிங் கார்ப்பரேஷன்' என்பதாகும்.
* 'எகிப்தின் நன்கொடை' என்று அழைக்கப்படுவது நைல் நதி ஆகும்.
* பசுவின் வயிற்றில் நான்கு அறைகள் உள்ளன.
* உலகில் 116 வகையான காகங்கள் உள்ளன.
* கங்காரு ஒரே தாவலில் 30 அடிகள் வரை தாண்டிவிடும்.
Thursday, June 12, 2008
இந்திய ரெயில்வே துறை
இந்திய ரெயில்வே துறை ஆசியாவிலேயே மிகப் பெரியதாகும். உலக அளவில் இரண்டாவது இடம் வகிக்கிறது. மும்பைக்கும் தானாவுக்கும் இடையே முதல் ரெயில் வண்டியை 1853-ம் ஆண்டு ஆங்கிலேயர் இயக்கினர்.இன்று இந்தியாவில் மொத்த இருப்புப் பாதைகளின் நீளம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 513 கி.மீ. ஆகும். அகல வழிப்பாதை மீட்டர் வழிப்பாதை குறுகிய வழிப்பாதை என்று மூன்று வகைப்பாதைகள் உள்ளன. வருகிற 2010-ம் ஆண்டுக்குள் எல்லா இருப்புப் பாதைகளையும் அகலவழிப் பாதையாக்க திட்டமிடப்பட்டுள்ளது.நம் நாட்டில் மொத்தம் 16 ரெயில்வே மண்டலங்கள் உள்ளன.இந்தியாவில் மொத்தம் 7 ஆயிறத்து 68 ரெயில்வே நிலையங்கள் உள்ளன. ரெயில் எஞ்சின்கள் 7 ஆயிரத்து 817. ரெயில் பெட்டிகள் 42 ஆயிரத்து 852. சரக்குப் பெட்டிகள் 2 லட்சத்து 44 ஆயிரத்து 419. ரெயில்வே ஊழியர்கள்17 லட்சம் பேர்.இவ்வளவு பிரம்மாண்டமான இந்திய ரெயில்வே பயணிகள் போக்குவரத்துக்கும், சரக்குகள் போக்குவரத்துக்கும் இன்றியமையாததாக உள்ளது.இந்திய ரெயில்வேயால் அண்மையில் அமைக்கப்பட்ட கொங்கண் இருப்புப் பாதை ஒரு பொறியியல் சாதனையாகக் கருதப்படுகிறது. இப்பாதை மும்பையிலிருந்தும் பிற வட இந்திய நகரங்களிலிருந்தும் பெங்களுர், திருவனந்தபுரம் செல்லும் நேரத்தையும், தூரத்தையும் வெகுவாகக் குறைத்துள்ளது. பல சுற்றுவழிப் பாதைகள் நேரடிப் பாதைகளாகி உள்ளன.'சதாப்தி எக்ஸ்பிரஸ்' 'ராஜதாணி எக்ஸ்பிரஸ்' போன்ற ரெயில்கள் இந்திய ரெயில்வேயின் முன்னேற்றப் படிகளாக அமைந்துள்ளன.
அறிந்து கொள்வோம்
* தேயிலை - பச்சைத் தங்கம்,பருத்தி - வெள்ளைத் தங்கம்,பெட்ரோல் - திரவத் தங்கம்,என்றும் சிறப்பித்துக் கூறப்படுகின்றன.
* உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு லண்டன் நகரிலும், வைரத்தின் மதிப்பு ஆலத்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலும் நிர்ணயிக்கப்படுகின்றன.
* ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 1 லட்சத்து 86 ஆயிரத்து 281 மைல்கள் ஆகும்.
* எகிப்தில் மஞ்சள் நிறமும், துருக்கியில் ஊதா நிறமும், சீனாவில் வெள்ளை நிறமும் துக்க நிறங்களாகக் கருதப்படுகின்றன.
Tuesday, June 10, 2008
யானை
* பாலுட்டிகளிலேயே தாண்ட முடியாத ஒரே விலங்கு யானைதான்.
* மிக மெதுவான நாடித் துடிப்பைக் கொண்டது இது.
* யானை தனது தும்பிக்கையில் ஏழரை லிட்டர் தண்ணீரை வைத்திருக்க முடியும்.
* யானையால் ஒரே நாளில் 80 கேலன் தண்ணீர் பருக முடியும். (ஒரு கேலன் என்பது ஏறக்குறைய மூன்றே முக்கால் லிட்டர்)
* யானையால் 60 கட்டளைகள் வரை கற்றுக்கொள்ள முடியும்.
* யானை தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு.
* யானை 70 ஆண்டுகளுக்கு மேல் வாழும்.
Tuesday, June 3, 2008
பொன்மொழிகள்
மாபெரும் படைப்புகள் சில நொடிகளில் உருவாக்கப்படுவதில்லை அதில் பல வருட கடினமான உழைப்பு ஒளிந்து கொண்டிருக்கிறது. - ராபர்-டி-ஆலென்.
சான்றோருக்கு உரிய ஆற்றல்கள் இரண்டு! ஒன்று சகிப்புத்தன்மை மற்றும் பொருமை-எபிக் டெட்டஸ்
வார்த்தையில் மட்டும் பணிவு இருந்தால் போதாது நடத்தையிலும் இருக்க வேண்டும். - டில்டன்.
நம் வாழ்வில் கிடைக்க முடியாத பெருஞ்செல்வம் நாம் வீணே கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் தான். - மார்க்ஸ்
நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் மனிதன் பெரும் பாடங்களைக் கற்றுக் கொள்கிறான். - சுவாமி விவேபானந்தர்.
எதிர்பார்ப்பு இல்லை என்றால் வாழ்வில் ஏமாற்றமே இல்லை. - சாக்ரடீஸ்.
Thursday, May 22, 2008
சண்டை
சண்டை போட்டோம் இனிதிட்ட
ஓரொழுத்தும் மிச்சம் வைக்காமல்.
தடாலென்று சாத்திய கதவுகளும்
வெப்பமூச்சுகளில் பறந்த பாத்திரங்களும்.
உண்ணமறுத்ததும் முதுகையே போர்க்கொடியாய்
காட்டிப் படுத்ததும் வெட்டிப்பேச்செதற்கு?
கிடைப்பாளா... கேளுங்கள் இத்தனைத் தீவிரமாய்-இந்த
மரமண்டையை காதலிக்க
ஒரு பைத்தியம்!!
Tuesday, May 20, 2008
ஆழம்
வெளியே எடுக்க முயன்றபொழுதுதான் தெரிந்தது...
எவ்வளவு ஆழம் நீ உள்ளே சென்றிருக்கிறாயென்று!
Monday, May 19, 2008
பெயர் என்ன?
இரு எழுத்து கொண்ட ஒரு பெயரின் முன் ஒர் எழுத்தை சேர்த்தால் வேறு பெயரும் அந்த மூன்றொழுத்துகளையும் மாற்றாமல் அதன் முன் மற்றும் ஒரு எழுத்தை சேர்த்தால் வேறு பெயரும் வரும் அந்த பெயர் என்ன?
வாழ்கை
வாழ்கை என்பது போராட்டம் வாழ்ந்து காட்டு!
வாழ்கை என்பது பூங்காவகம் சந்தோஷமாயிரு!
வாழ்கை என்பது பாலைவனம் மனந்தளராதே!
வாழ்கை என்பது மலர்தூவிய படுக்கை அனுபவி-ஆனால்
வாழ்கை என்பது ஒரு கட்டுப்பாடானது
எல்லையை மீறி விடாதே!
கோபம்
உன்னைக் காணும்வரை
உறுதியாயிறுக்கிறேன்
தாமதமாய் வந்தததிற்க்காக
உன்னைப்பார்த்து
திட்டவேண்டுமென்று-ஆனால்
உன்னைப் பார்த்ததும்
பேசவேமுடியவில்லையே
பிறகெங்கே திட்டுவது...
மழை
உன்னை நனைத்த மழை
எனை நனைக்கும்போது சொன்னது
நான் மழையாய் வரவில்லை
காதலை நனைத்துவிட்டு
காதலாய் வந்திருக்கிறேன்.
Sunday, May 18, 2008
வலி
முடியும் என்று சொல்லி-நீ
பேசாமலிருந்த அந்த பத்து நாட்களின்
வலி எங்கே தொலைந்தது
பதினோராவது நாள்
முத்தத்தின் போது...!
இழப்பு
உன்னை இழந்து விடுவேன்! ஏனென்றால்
என்னை மகிழ்விக்கும் எதுவும்
வாழ்க்கையில் நிலைத்ததில்லை!!
சென்னைக்கு வந்த ஆஸி. கப்பலில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்
ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பலில் இருந்த கன்டெய்னரில் ராக்கெட் லாஞ்சர் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு, 16 கன்டெய்னர்களில் இரும்பு பொருட்கள் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டன. எண்ணூர் துறைமுகத்திற்கு வந்த இந்த கன்டெய்னர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஒரு கன்டெய்னரில் ராக்கெட் லாஞ்சரின் உபயோகப்படுத்தப்பட்ட உதிரிப் பாகங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கன்டெய்னர் அப்படியே மூடி சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. இதுகுறித்து கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நைஜீரியாவில் எண்ணை குழாய் வெடித்து 100 பேர் பலி
ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் எண்ணைக்குழாய் வெடித்ததில் 100 பேர் பலியானார்கள். நைஜீரியாவில் பெட்ரோல் அதிக அளவில் கிடைத்து வருகிறது. உலகிலேயே எண்ணை ஏற்றுமதி நாடுகளில் 8-வது நாடாக நைஜீரியா உள்ளது. இதன் பொருளாதார தலைநகராக லாகோஸ் விளங்குகிறது. இங்கு இருந்து உலகின் பல பகுதிகளுக்கும் கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணை ஏற்று மதிக்காக லாகோஸ் நகரம் முழுவதும் எண்ணை குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. லாகோஸ்சின் புறநகர் பகுதியில் அலிமோஷோ மாவட்டத்தில் இஜேகன் என்ற கிராமத்தில் சாலை போடும் பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் ரோடு என்ஜின் அந்த வழியாக சென்றது. அப்போது தரையில் பதிக்கப்பட்ட எண்ணைக் குழாய்கள் மீது அந்த ரோடு என்ஜின் சென்றதால் குழாய்கள் நசுங்கி வெடித்தன. எண்ணைக் குழாய்கள் திடீர் என்று வெடித்ததால் தீ பிடித்தது. அநத தீ, 500-க்கும் மேற்பட்ட வீடுகளையும், பள்ளிக்கூடங்களையும் சூழ்ந்தது. இதனால் அந்த நகரமே தீ பிடித்து எரிவது போல இருந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உடல் கருகி செத்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். ஏறத்தாழ 3 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. 1998-ம் ஆண்டு நைஜீரியாவில் எண்ணை குழாய் வெடித்ததில் 1500 பேர் பலியானார்கள். 2006-ம் ஆண்டு இதே லாகோஸ் நகரில் எண்ணைக் குழாயில் தீப்பிடித்ததில் 250பேர் பலியானார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எண்ணைக்குழாயை உடைத்து பெட்ரோல் திருடியதில் குழாய் வெடித்தது. இதில் 45 பேர் பலியானார்கள்
Saturday, May 17, 2008
பொழுது
அன்பே நன்று விடிந்ததா பொழுது என்பாய்
அந்த நொடி வரை என்று வந்தது வெளிச்சம் எனக்கு!
தமிழ்பெண்
நீ பேசுவதால் தமிழ் மேலும் தித்திக்கிறதா-இல்லை
தமிழ் பேசுவதால் நீ இன்னும் தித்திக்கின்றாயா?
உனக்குள்
தொலைந்தே விட்டதோ என்று
இரவு முழுவதும் அழுதழுது உறங்கிப் போன மழலை
காலையில் கண் விழித்ததும்
தளையணை மேல் தன் பிரிய பொம்மையை கண்டு
மார்போடு அள்ளி அணைத்து
முத்த மழை பொழிந்து ஆனந்தக் கண்ணீரினால்
நினைத்து உள்ளம் நொகிழ்வதைப் போல்
ஒவ்வொரு முறையும் உன்னை விலகிபின் கூடும் பொழுதுகளில்
உன்னுள் புகுந்து எனதுயிர் மீள்கின்றேன் அன்பே!!
மியான்மார் புயலில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஆலிவுட் நடிகர்கள் உதவி
மியான்மார் நாட்டை தாக்கிய நர்கிஸ் புயலால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்கு ஆலிவுட் சினிமா நட்சத்திரங்கள் முன்வந்து இருக்கிறார்கள். அவர்கள் 2 கோடி ரூபாய் திரட்டி கொடுக்கிறார்கள். சென்னையை மிரட்டிய நர்கிஸ் புயல், மியான்மார் நாட்டை சமீபத்தில் தாக்கியது. இந்த புயலுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பல லட்சம் பேர் காயம் அடைந்தனர். மேலும் 12 லட்சம் பேர் வீடு வாசல்களை இழந்து தவிக்கிறார்கள். வீடுகள் இடிந்து விழுந்து விட்டதால் அவர்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமலும், உண்பதற்கு உணவு இல்லாமலும் தவிக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்களிலும், அரசு கட்டிடங்களிலும் தஞ்சம் புகுந்து உள்ளனர். பல லட்சக்கணக்கான சிறுவர்கள் அனாதைகளாகி விட்டனர். தாய் தந்தையை இழந்து அவர்கள் ஆதரிப்பார் யாரும் இல்லாமலும், தங்குவதற்கு இடம் இல்லாமலும், பசி பட்டினியோடும், நோயோடும் அவர்கள் வாழும் நிலை பரிதாபமாக உள்ளது. சிறுவர்களுக்கு உதவுவதற்கு இங்கிலாந்து நாட்டில் உள்ள நாட் ஆன் அவர் வாட்ச் என்ற சமூக சேவை இயக்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த இயக்கத்தை ஆலிவுட் நடிகர்களான ஜார்ஜ் குளூனி, பிராட் பிட், டான் செடில், மாட் டமோன் ஆகியோர் தான் உருவாக்கி பலருக்கும் உதவி செய்து வருகிறார்கள்.ஆலிவுட் நடிகர்கள் மியான்மார் நாட்டு சிறுவர்களுக்கு உதவுவதற்கு ஆலிவுட் நடிகர்களின் இயக்கம் முன்வந்து உள்ளது. நடிகர்கள் முதல் கட்டமாக ரூ.2 கோடி திரட்டி கொடுத்து உள்ளனர். மேலும் ஒரு கோடி ரூபாய் கொடுக்கவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.மியான்மார் சிறுவர்களின் மருத்துவத்துக்கும், உணவுக்கும், நிவாரணத்துக்கும் இந்த நிதி செலவிடப்படும் என்று அந்த இயக்கத்தின் தலைவர் அலெக்ஸ் வாக்னர் தெரிவித்தார்.
Friday, May 16, 2008
விளையாட்டு
விளையாடியது போதும்
இனியாவது நிறுத்து
தொலைபேசியில் நான்
ஹலோ சொல்லியும் நீடிக்கும்
அந்த ஐந்து வினாடி
மொனவிளையாட்டை
இளம் நட்சத்திரத்தின் வெடிப்பு அமெரிக்க விஞ்ஞானிகளால் அவதானிப்பு
Thursday, May 15, 2008
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸில் ஏற்பட்ட காதலால் தங்கச்சங்கிலி திருட்டு
பஸ்ஸில் பயணம் செய்யும் போது ஏற்பட்ட காதலால் தனது 15ஆயிரம் பெறுமதியான தங்க சங்கிலியை காதலனிடம் பறிகொடுத்த யுவதி இதுதொடர்பாக காலி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ்ஸில் இருவரும் அருகே அமர்ந்து பயணம் செய்த போது இருவருக்குமிடையில் காதல் ஏற்ப்பட்டது பின்னர் கையடக்க தொலைபேசி மூலம் உரையாடி வந்தனர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த இந்த யுவதியும் காலியைச் சேர்ந்த இளைஞனும் சில தினங்களுக்கு முன்னர் காலியில் ஹோட்டல் ஒன்றில் சந்தித்து திரையரங்கில் படம் பார்த்தனர் யுவதி வீட்டுக்கு வந்து பார்த்த போது கழுத்தில் இருந்த தங்கசங்கிலி காணாமல் போனதை கண்டு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இந்த யுவதிக்கு அந்த இளைஞன் கொடுத்த முகவரி தவறானது எனவும் அப்படியானவர் இம்முகவரியில் இல்லையெனவும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரிய வருகிறது.
இமயமலைச் சிகரமான க்வோமோலாங்மாவில் ஒலிம்பிக் தீபம்
யானைக்கு முன்னே மணியோசை வருவதுபோல உலகமெங்குமிருந்து விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்காக சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு வருவதற்கு முன்பு, ஒலிம்பிக் தீபம் உலகமெங்கும் சுற்றி வருகிறது. திபெத் விவகாரத்தால் இந்தத் தீப உலா ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களைச் சந்திக்க வேண்டியிருப்பது தனிக்கதை. இதுவரை எந்த ஒலிம்பிக்ஸக்கும் இல்லாத சிறப்பு பெய்ஜிங் ஒலிம்பிக்ஸக்கு உண்டு. ஒலிம்பிக் தீபம் இந்த முறை க்வோமோலாங்மா சிகரத்துக்குக் கொண்டு போகப்படுவது தான் அது. எந்தப் பருவநிலையையும் தாங்கும் சக்தியுடன் ஒலிம்பிக் தீபம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இமயமலைச் சிகரமான க்வோமோலாங்மாவில் எவ்வளவு பயங்கரப் பனிப்புயல் அடித்தாலும், வெப்பநிலை எவ்வளவு பாதாளத்துக்குப் போனாலும், காற்றில் பிராணவாயு மிகக் குறைவாக இருந்தபோதும் தீபத்தின் ஜூவாலை மட்டும் கொஞ்சம்கூட மங்காது. அணைந்து போகாது. அப்படிப்பட்ட சிறப்புத் தொழில்நுட்பத்தில் ஒலிம்பிக் டார்ச்சை உருவாக்கி இருக்கிறோமாக்கும்’ என்று “சைனா ஏரோஸ்பேஸ் சயன்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி கார்ப்பரேஷன்’ மார்தட்டிக் கொள்கிறது.
அந்தச் சிகரத்தின்மீது ஏறுபவர்கள் தோள்களில் சுமந்து செல்லும் பல்வேறு அதி நவீன சுவாச சாதனங்கள் உதவி செய்தாலும் தடுமாறுகிறவர்கள் பலபேர். ஆனால் இந்த ஜோதி தடுமாறாது என்று நம்புகிறார்கள்.
இந்தச் சிகரத்தில் வெப்பநிலை பொதுவாக எவ்வளவு தெரியுமா! மைனஸ் 30 டிகிரி செல்சியஸ்!
எந்த நிலையிலும் தீபத்தின் வெளிச்சத்தைத் துல்லியமாகப் பார்க்க முடியும் என்று சவால் விட்டிருக்கிறார்கள் சீன விஞ்ஞானிகள்.
அதுமட்டுமல்ல, அவர்களின் இன்னொரு சவால் இதுவரை யாரும் விடாத சவால்:
“”நாளைக்கே க்வோமோலாஸ்மா சிகரம் இருநூறு மீட்டர் உயரமாக வளர்ந்து விடுகிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அதன் உச்சியிலும் எங்கள் ஒலிம்பிக் தீபம் ஒளி உமிழும். சேலன்ச்?”
அதுசரி, க்வோமோலாங்மா என்று ஒரு சிகரமா? கேள்விப்பட்டதில்லையே என்று குழம்ப வேண்டாம்.
எவரெஸ்ட் சிகரத்தை சீனாவில் க்வோமோலாங்கா என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
மலையாளத்திலிருந்து இன்னொரு அழகிய மலர்
கொடைக்கானல் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். கொடைக்கானலில் நடக்கும் ஒரு கொலையைச் சுற்றிப் படம் நகருகிறது. திரில், திகில் தவிர கிளாமரும் படத்தில் நிறையவே இருக்குமாம். அதற்கு பூர்ணா சிறப்பாக பொருந்தி வருவார் என்பதால்தான் அவரைத் தேர்வு செய்தனாரம்.
கவர்ச்சிகரமாக இருக்கும் பூர்ணா, நடனத்தில் சூரப்புலியாம். மலையாளத்து அம்ரிதா டிவி நடத்திய டான்ஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளாராம்.
நயனதாரா, மீரா ஜாஸ்மின், ஆசின் வரிசையில் தனக்கும் இடம் கிடைக்க ரசிகர்கள் தயவு செய்யட்டும் என்ற நம்பிக்கையுடன் கொடைக்கானல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பூர்ணா.
மிஸ் சின்னத்திரை-2008: நடிகை ரியா தேர்வு
இறுதியில் நடிகைகளின் அறிவுத் திறனைச் சோதிக்கும் சுற்று. இதில் நடுவராக வந்திருந்த இயக்குநர் மாதேஷ் அனைத்து போட்டியாளர்களுக்கும் பொதுவான ஒரு கேள்வியை முன் வைத்தார். ‘பெண்மையின் இலக்கணம் என்ன?” என்ற அவரது கேள்விக்கு பத்துபேரும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக, அடக்கம், பொறுமை, தாய்மை, நாணம்(!), காதலில் உறுதி என்று சொல்லிவைத்த மாதிரி பதில் கூறினர்.
இறுதியில் மிஸ் சின்னத்திரை 2008-ஆக ரியா தேர்வு செய்யப்பட்டார். தாரிகா இரண்டாமிடத்தையும், அனிஷா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
மேலும் தாரிகாவுக்கு மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட அழகி எனும் விருதும் வழங்கப்பட்டது. இதைத் தவிர நடிகை மதுவுக்கு சிறந்த உடல் அழகி பட்டமும், ஸ்வேதாவுக்கு சிறந்த கண்ணழகி விருதும், தீபாவுக்கு சிறந்த பூனைநடை (அதாங்க கேட்வாக்!) அழகி விருதும், ஜூலிக்கு சிறந்த சரும அழகி விருதும், காவ்யாவுக்கு சிறந்த சிரிப்பழகி விருதும் வழங்கப்பட்டது.
விஜய் ஆதிராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விதம் சிறப்பாக இருந்தது. பிரபல பின்னணிப் பாடகி மஹதி, நடிகைகள் ப்ரியதர்ஷினி, நீபா, டிங்கு ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். விஷன்ப்ரோ ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது