Thursday, May 15, 2008

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸில் ஏற்பட்ட காதலால் தங்கச்சங்கிலி திருட்டு

பஸ்ஸில் பயணம் செய்யும் போது ஏற்பட்ட காதலால் தனது 15ஆயிரம் பெறுமதியான தங்க சங்கிலியை காதலனிடம் பறிகொடுத்த யுவதி இதுதொடர்பாக காலி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ்ஸில் இருவரும் அருகே அமர்ந்து பயணம் செய்த போது இருவருக்குமிடையில் காதல் ஏற்ப்பட்டது பின்னர் கையடக்க தொலைபேசி மூலம் உரையாடி வந்தனர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த இந்த யுவதியும் காலியைச் சேர்ந்த இளைஞனும் சில தினங்களுக்கு முன்னர் காலியில் ஹோட்டல் ஒன்றில் சந்தித்து திரையரங்கில் படம் பார்த்தனர் யுவதி வீட்டுக்கு வந்து பார்த்த போது கழுத்தில் இருந்த தங்கசங்கிலி காணாமல் போனதை கண்டு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இந்த யுவதிக்கு அந்த இளைஞன் கொடுத்த முகவரி தவறானது எனவும் அப்படியானவர் இம்முகவரியில் இல்லையெனவும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரிய வருகிறது.

இமயமலைச் சிகரமான க்வோமோலாங்மாவில் ஒலிம்பிக் தீபம்


யானைக்கு முன்னே மணியோசை வருவதுபோல உலகமெங்குமிருந்து விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்காக சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு வருவதற்கு முன்பு, ஒலிம்பிக் தீபம் உலகமெங்கும் சுற்றி வருகிறது. திபெத் விவகாரத்தால் இந்தத் தீப உலா ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களைச் சந்திக்க வேண்டியிருப்பது தனிக்கதை. இதுவரை எந்த ஒலிம்பிக்ஸக்கும் இல்லாத சிறப்பு பெய்ஜிங் ஒலிம்பிக்ஸக்கு உண்டு. ஒலிம்பிக் தீபம் இந்த முறை க்வோமோலாங்மா சிகரத்துக்குக் கொண்டு போகப்படுவது தான் அது. எந்தப் பருவநிலையையும் தாங்கும் சக்தியுடன் ஒலிம்பிக் தீபம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இமயமலைச் சிகரமான க்வோமோலாங்மாவில் எவ்வளவு பயங்கரப் பனிப்புயல் அடித்தாலும், வெப்பநிலை எவ்வளவு பாதாளத்துக்குப் போனாலும், காற்றில் பிராணவாயு மிகக் குறைவாக இருந்தபோதும் தீபத்தின் ஜூவாலை மட்டும் கொஞ்சம்கூட மங்காது. அணைந்து போகாது. அப்படிப்பட்ட சிறப்புத் தொழில்நுட்பத்தில் ஒலிம்பிக் டார்ச்சை உருவாக்கி இருக்கிறோமாக்கும்’ என்று “சைனா ஏரோஸ்பேஸ் சயன்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி கார்ப்பரேஷன்’ மார்தட்டிக் கொள்கிறது.
அந்தச் சிகரத்தின்மீது ஏறுபவர்கள் தோள்களில் சுமந்து செல்லும் பல்வேறு அதி நவீன சுவாச சாதனங்கள் உதவி செய்தாலும் தடுமாறுகிறவர்கள் பலபேர். ஆனால் இந்த ஜோதி தடுமாறாது என்று நம்புகிறார்கள்.
இந்தச் சிகரத்தில் வெப்பநிலை பொதுவாக எவ்வளவு தெரியுமா! மைனஸ் 30 டிகிரி செல்சியஸ்!
எந்த நிலையிலும் தீபத்தின் வெளிச்சத்தைத் துல்லியமாகப் பார்க்க முடியும் என்று சவால் விட்டிருக்கிறார்கள் சீன விஞ்ஞானிகள்.
அதுமட்டுமல்ல, அவர்களின் இன்னொரு சவால் இதுவரை யாரும் விடாத சவால்:
“”நாளைக்கே க்வோமோலாஸ்மா சிகரம் இருநூறு மீட்டர் உயரமாக வளர்ந்து விடுகிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அதன் உச்சியிலும் எங்கள் ஒலிம்பிக் தீபம் ஒளி உமிழும். சேலன்ச்?”
அதுசரி, க்வோமோலாங்மா என்று ஒரு சிகரமா? கேள்விப்பட்டதில்லையே என்று குழம்ப வேண்டாம்.
எவரெஸ்ட் சிகரத்தை சீனாவில் க்வோமோலாங்கா என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

மலையாளத்திலிருந்து இன்னொரு அழகிய மலர்




மலையாளத்திலிருந்து இன்னொரு அழகிய மலர், தமிழ் திரைத் தோட்டத்திற்கு வந்துள்ளது. பெயர் பூர்ணா. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நாயகிகளின் பட்டியல் மிகப் பெரியது. அந்த வரிசையில் புதிதாக வந்து இணைந்துள்ளார் பூர்ணா. பூர்ணாவின் இயற்பெயர் ஷம்னா. மலையாளத்தில் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். தமிழுக்கு கொடைக்கானல் என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். கவர்ச்சிகரமான உடல் வாகுடன் உள்ள பூர்ணாவுக்கு மற்ற மலையாள நடிகைகளுக்குக் கிடைத்த அதே அளவிலான அபரிமிதமான வரவேற்பு தனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளதாம். டி.கே.போஸ் இயக்கும் கொடைக்கானலில் பூர்ணாதான் ஹீரோயின். படத்தில் நடிகையாகவே இவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே பிரமாதமாக நடித்து பிரளயத்தைக் கிளப்பப் போவதாக கூறுகிறார் பூர்ணா. படத்தில் திலக், சேகர் என இரு ஹீரோக்கள். இருவருமே புதுமுகம். இதுதவிர மலேசியாவைச் ேசர்ந்த காண்டீபன் என்பவர் வில்லனாக அறிமுகமாகிறார். இவர் மலேசியாவில் டிவி படங்களில் பிரபல நடிகராம்.
கொடைக்கானல் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். கொடைக்கானலில் நடக்கும் ஒரு கொலையைச் சுற்றிப் படம் நகருகிறது. திரில், திகில் தவிர கிளாமரும் படத்தில் நிறையவே இருக்குமாம். அதற்கு பூர்ணா சிறப்பாக பொருந்தி வருவார் என்பதால்தான் அவரைத் தேர்வு செய்தனாரம்.
கவர்ச்சிகரமாக இருக்கும் பூர்ணா, நடனத்தில் சூரப்புலியாம். மலையாளத்து அம்ரிதா டிவி நடத்திய டான்ஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளாராம்.
நயனதாரா, மீரா ஜாஸ்மின், ஆசின் வரிசையில் தனக்கும் இடம் கிடைக்க ரசிகர்கள் தயவு செய்யட்டும் என்ற நம்பிக்கையுடன் கொடைக்கானல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பூர்ணா.

மிஸ் சின்னத்திரை-2008: நடிகை ரியா தேர்வு





சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் திறமை காட்டிவரும் இளம் நடிகைகளில் பலவகையிலும் சிறந்து விளங்குபவர்களை அடையாளம் காட்டுவதற்காக, சின்னத் திரை நடிகர் விஷ்வா உருவாக்கிய நிகழ்ச்சிதான் மிஸ் சின்னத்திரைப் போட்டி. கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஆண்டு தோறும் இப்போட்டியை நடத்துவதாக அறிவித்திருந்தார் விஷ்வா. அதன்படி 2008-ம் ஆண்டுக்கான மிஸ் சின்னத்திரைப் போட்டி சென்னை லாமிக்கேல் கிளப்பில் 11ம் தேதி இரவு நடந்தது. கண்கவரும் நடன நிகழ்ச்சிகளுடன் துவங்கிய இப்போடியில் சின்னத்திரையில் பிரபலமாகத் திகழும் மது, ஆர்த்தி, தாரிகா, ஸ்வேதா, தீபா, ஜூலி, ரியா, அனிஷா, காவ்யா மற்றும் அபர்ணா ஆகிய பத்து நடிகைகள் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர். இதில் நடுவர்களாக பிரபல நடிகைகள் சங்கீதா, அஞ்சலி, இயக்குநர்கள் மாதேஷ், கோலங்கள் திருச்செல்வம், கடந்த ஆண்டு மிஸ் சின்னத்திரை பட்டம் வென்ற சந்தோஷி மற்றும் மாடல் அழகி காவ்யா ஆகியோர் பங்கேற்றனர். முதல் சுற்று புடவை அணிந்த அழகிகளின் அணிவகுப்பு நடந்தது. பின்னர் தனித் திறமைச் சுற்று நடைபெற்றது. இதில் அழகிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த ஆடல், பாடல் மற்றும் இதர திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் ஒரு தேர்ந்த காராத்தே வீரரைப்போல நடிகை தாரிகா சிமெண்ட் பலகைகளை உடைத்து பரபரப்பேற்படுத்தினார். மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றுகளில் மேற்கத்திய நாகரிக உடையணிந்து நடைபோட்டனர்.
இறுதியில் நடிகைகளின் அறிவுத் திறனைச் சோதிக்கும் சுற்று. இதில் நடுவராக வந்திருந்த இயக்குநர் மாதேஷ் அனைத்து போட்டியாளர்களுக்கும் பொதுவான ஒரு கேள்வியை முன் வைத்தார். ‘பெண்மையின் இலக்கணம் என்ன?” என்ற அவரது கேள்விக்கு பத்துபேரும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக, அடக்கம், பொறுமை, தாய்மை, நாணம்(!), காதலில் உறுதி என்று சொல்லிவைத்த மாதிரி பதில் கூறினர்.
இறுதியில் மிஸ் சின்னத்திரை 2008-ஆக ரியா தேர்வு செய்யப்பட்டார். தாரிகா இரண்டாமிடத்தையும், அனிஷா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
மேலும் தாரிகாவுக்கு மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட அழகி எனும் விருதும் வழங்கப்பட்டது. இதைத் தவிர நடிகை மதுவுக்கு சிறந்த உடல் அழகி பட்டமும், ஸ்வேதாவுக்கு சிறந்த கண்ணழகி விருதும், தீபாவுக்கு சிறந்த பூனைநடை (அதாங்க கேட்வாக்!) அழகி விருதும், ஜூலிக்கு சிறந்த சரும அழகி விருதும், காவ்யாவுக்கு சிறந்த சிரிப்பழகி விருதும் வழங்கப்பட்டது.
விஜய் ஆதிராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விதம் சிறப்பாக இருந்தது. பிரபல பின்னணிப் பாடகி மஹதி, நடிகைகள் ப்ரியதர்ஷினி, நீபா, டிங்கு ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். விஷன்ப்ரோ ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது

வருகைக்கு நன்றி!!!