Sunday, May 18, 2008

சென்னைக்கு வந்த ஆஸி. கப்பலில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்

ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பலில் இருந்த கன்டெய்னரில் ராக்கெட் லாஞ்சர் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு, 16 கன்டெய்னர்களில் இரும்பு பொருட்கள் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டன. எண்ணூர் துறைமுகத்திற்கு வந்த இந்த கன்டெய்னர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஒரு கன்டெய்னரில் ராக்கெட் லாஞ்சரின் உபயோகப்படுத்தப்பட்ட உதிரிப் பாகங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கன்டெய்னர் அப்படியே மூடி சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. இதுகுறித்து கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 உங்கள் கருத்து:

வருகைக்கு நன்றி!!!