நாம் சந்தித்து விட்டுப் பிரியும் நேரம்
திரும்பிப் பார்க்கும் போதெல்லாம்
அழுகை வருகிறதென்றாய் - அன்று
முதல் திரும்பிப் பார்ப்பதில்லையென
சத்தியம் செய்து விட்டுப் பிரிந்தோம்
மறையும் கடைசி நொடியில் - நீ
பார்க்க மாட்டாயென நானும்
நான் பார்க்க மாட்டேன் என நீயும்
ஒன்றாய் திரும்பிப் பார்க்க
செய்த சத்தியம் எங்கேப் போனதென
சத்தியமாய் தெரியவில்லை
Tuesday, July 8, 2008
சத்தியம்
Labels:
கவிதைகள்
முட்டை உடையறதால குஞ்சு வெளியே வருதா..? இல்லை குஞ்சு வர்றதால முட்டை உடையுதா?
முதலில் கோழி வந்ததா முட்டை வந்ததா என்ற கேள்வி மாதிரி இதுவும் நல்லா இருக்கே! ஆனால் இதுக்குப் பதில் சொல்ல முடியுமே.. குஞ்சுதான் முட்டையை உடைத்து வெளியே வரும். முட்டை தானாக உடையாது. இதுக்காக குஞ்சுகளின் அலகில் 'எக் டூத்' என்ற முட்டை பல்லும் கழுத்தில் 'ஹேட்சிங் மஸில்' எனப்படும் முட்டையை உடைப்பதற்கான தசையும் இருக்கும். குஞ்சு வெளியே வர தயாரானதும் உள்ளிருந்தே தன் கூர்மையான முட்டைப் பல்லால் ஓட்டை போடத் தொடங்கும். கொஞ்சம் உடைந்ததும் கழுத்தில் இருக்கும் தசையால் உடைந்த பகுதியை உந்தித் கள்ளி கொஞ்சம் கொஞசமாக வெளியே வந்த சில நாட்களில் இந்த முட்டைப் பல்லும் தசையும் மறைந்துவிடும்.
Labels:
சில ஆச்சிரியங்கள்
Subscribe to:
Posts (Atom)
வருகைக்கு நன்றி!!!