Tuesday, June 24, 2008

நிவாரணம்

உனக்கு ஓர் கடிதம் எழுத வேண்டுமென்றுதான்
முதன் முதலாய் கிறுக்கினேன்
காதல் கடிதம் என்கிற பெயரில்
கடிதத்தை ஏற்க மறுத்தாய்
கடிதம் கவிதையாகி இன்று வரை
தொடர்கிறது உனக்கும் எனக்குமான
நிரந்தரப் பிரிவை சரிசெய்யும் இடைக்கால நிவாரணமாய்...!

வருகைக்கு நன்றி!!!