Wednesday, June 25, 2008

ராட்டில் ஸ்நேக்


பல வகை பாம்புகள் தங்கள் வாலை உயர்த்தி அசைக்கும் பழக்கம் உடையவை. ஆனால் 'ராட்டில் ஸ்நேக்' மட்டும் வால் பகுதியை அசைக்கும் போது ஒருவித வித்தியாசமான ஒலி எழுப்பும். இதன் வால் பகுதி கிலுகிலுப்பை போன்ற அமைப்பில் இருக்கும். வாலை அசைத்து ஒலி எழுப்பும் ஒரே பாம்பு 'ராட்டில் ஸ்நேக்' தான்!.

மரங்கொத்தி


மரங்கொத்தி எவ்வளவு வேகமாக மரத்தைக் கொத்தினாலும் அவற்றின் மூளைக்கு பாதிப்பு வராததற்குக் காரணம் அதன் அலகுக்கும் மண்டை ஓட்டுக்கும் இடையே பஞ்சு போன்ற ஒரு அமைப்பு இருப்பதுதான். இந்த அமைப்பு மரங்கொத்தியின் அலகு கொத்துவதால் ஏற்படும் அதிர்வுகளை உள்வாங்கிக்கொள்ளும். அதோடு இவற்றின் மண்டை ஓடு கெட்டியாக இருந்தாலும் பஞ்சு போலவே இருக்கும். மற்ற பறவைகளின் மூளையை விட மரங்கொத்தியின் மூளை சிறியது. இப்படி வல காரணங்களால் மரங்கொத்தி நொடிக்கு 20 தடவைக்கு மேல் கொத்தினாலும் அவற்றுக்கு சின்ன தலைவலி கூட ஏற்படுவது இல்லை.

வருகைக்கு நன்றி!!!