மியான்மார் நாட்டை தாக்கிய நர்கிஸ் புயலால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்கு ஆலிவுட் சினிமா நட்சத்திரங்கள் முன்வந்து இருக்கிறார்கள். அவர்கள் 2 கோடி ரூபாய் திரட்டி கொடுக்கிறார்கள். சென்னையை மிரட்டிய நர்கிஸ் புயல், மியான்மார் நாட்டை சமீபத்தில் தாக்கியது. இந்த புயலுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பல லட்சம் பேர் காயம் அடைந்தனர். மேலும் 12 லட்சம் பேர் வீடு வாசல்களை இழந்து தவிக்கிறார்கள். வீடுகள் இடிந்து விழுந்து விட்டதால் அவர்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமலும், உண்பதற்கு உணவு இல்லாமலும் தவிக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்களிலும், அரசு கட்டிடங்களிலும் தஞ்சம் புகுந்து உள்ளனர். பல லட்சக்கணக்கான சிறுவர்கள் அனாதைகளாகி விட்டனர். தாய் தந்தையை இழந்து அவர்கள் ஆதரிப்பார் யாரும் இல்லாமலும், தங்குவதற்கு இடம் இல்லாமலும், பசி பட்டினியோடும், நோயோடும் அவர்கள் வாழும் நிலை பரிதாபமாக உள்ளது. சிறுவர்களுக்கு உதவுவதற்கு இங்கிலாந்து நாட்டில் உள்ள நாட் ஆன் அவர் வாட்ச் என்ற சமூக சேவை இயக்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த இயக்கத்தை ஆலிவுட் நடிகர்களான ஜார்ஜ் குளூனி, பிராட் பிட், டான் செடில், மாட் டமோன் ஆகியோர் தான் உருவாக்கி பலருக்கும் உதவி செய்து வருகிறார்கள்.ஆலிவுட் நடிகர்கள் மியான்மார் நாட்டு சிறுவர்களுக்கு உதவுவதற்கு ஆலிவுட் நடிகர்களின் இயக்கம் முன்வந்து உள்ளது. நடிகர்கள் முதல் கட்டமாக ரூ.2 கோடி திரட்டி கொடுத்து உள்ளனர். மேலும் ஒரு கோடி ரூபாய் கொடுக்கவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.மியான்மார் சிறுவர்களின் மருத்துவத்துக்கும், உணவுக்கும், நிவாரணத்துக்கும் இந்த நிதி செலவிடப்படும் என்று அந்த இயக்கத்தின் தலைவர் அலெக்ஸ் வாக்னர் தெரிவித்தார்.
Saturday, May 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
வருகைக்கு நன்றி!!!
0 உங்கள் கருத்து:
Post a Comment