Wednesday, June 25, 2008

மரங்கொத்தி


மரங்கொத்தி எவ்வளவு வேகமாக மரத்தைக் கொத்தினாலும் அவற்றின் மூளைக்கு பாதிப்பு வராததற்குக் காரணம் அதன் அலகுக்கும் மண்டை ஓட்டுக்கும் இடையே பஞ்சு போன்ற ஒரு அமைப்பு இருப்பதுதான். இந்த அமைப்பு மரங்கொத்தியின் அலகு கொத்துவதால் ஏற்படும் அதிர்வுகளை உள்வாங்கிக்கொள்ளும். அதோடு இவற்றின் மண்டை ஓடு கெட்டியாக இருந்தாலும் பஞ்சு போலவே இருக்கும். மற்ற பறவைகளின் மூளையை விட மரங்கொத்தியின் மூளை சிறியது. இப்படி வல காரணங்களால் மரங்கொத்தி நொடிக்கு 20 தடவைக்கு மேல் கொத்தினாலும் அவற்றுக்கு சின்ன தலைவலி கூட ஏற்படுவது இல்லை.

0 உங்கள் கருத்து:

வருகைக்கு நன்றி!!!