Thursday, May 15, 2008

மலையாளத்திலிருந்து இன்னொரு அழகிய மலர்




மலையாளத்திலிருந்து இன்னொரு அழகிய மலர், தமிழ் திரைத் தோட்டத்திற்கு வந்துள்ளது. பெயர் பூர்ணா. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நாயகிகளின் பட்டியல் மிகப் பெரியது. அந்த வரிசையில் புதிதாக வந்து இணைந்துள்ளார் பூர்ணா. பூர்ணாவின் இயற்பெயர் ஷம்னா. மலையாளத்தில் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். தமிழுக்கு கொடைக்கானல் என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். கவர்ச்சிகரமான உடல் வாகுடன் உள்ள பூர்ணாவுக்கு மற்ற மலையாள நடிகைகளுக்குக் கிடைத்த அதே அளவிலான அபரிமிதமான வரவேற்பு தனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளதாம். டி.கே.போஸ் இயக்கும் கொடைக்கானலில் பூர்ணாதான் ஹீரோயின். படத்தில் நடிகையாகவே இவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே பிரமாதமாக நடித்து பிரளயத்தைக் கிளப்பப் போவதாக கூறுகிறார் பூர்ணா. படத்தில் திலக், சேகர் என இரு ஹீரோக்கள். இருவருமே புதுமுகம். இதுதவிர மலேசியாவைச் ேசர்ந்த காண்டீபன் என்பவர் வில்லனாக அறிமுகமாகிறார். இவர் மலேசியாவில் டிவி படங்களில் பிரபல நடிகராம்.
கொடைக்கானல் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். கொடைக்கானலில் நடக்கும் ஒரு கொலையைச் சுற்றிப் படம் நகருகிறது. திரில், திகில் தவிர கிளாமரும் படத்தில் நிறையவே இருக்குமாம். அதற்கு பூர்ணா சிறப்பாக பொருந்தி வருவார் என்பதால்தான் அவரைத் தேர்வு செய்தனாரம்.
கவர்ச்சிகரமாக இருக்கும் பூர்ணா, நடனத்தில் சூரப்புலியாம். மலையாளத்து அம்ரிதா டிவி நடத்திய டான்ஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளாராம்.
நயனதாரா, மீரா ஜாஸ்மின், ஆசின் வரிசையில் தனக்கும் இடம் கிடைக்க ரசிகர்கள் தயவு செய்யட்டும் என்ற நம்பிக்கையுடன் கொடைக்கானல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பூர்ணா.

0 உங்கள் கருத்து:

வருகைக்கு நன்றி!!!