Tuesday, July 8, 2008

சத்தியம்

நாம் சந்தித்து விட்டுப் பிரியும் நேரம்
திரும்பிப் பார்க்கும் போதெல்லாம்
அழுகை வருகிறதென்றாய் - அன்று
முதல் திரும்பிப் பார்ப்பதில்லையென
சத்தியம் செய்து விட்டுப் பிரிந்தோம்
மறையும் கடைசி நொடியில் - நீ
பார்க்க மாட்டாயென நானும்
நான் பார்க்க மாட்டேன் என நீயும்
ஒன்றாய் திரும்பிப் பார்க்க
செய்த சத்தியம் எங்கேப் போனதென
சத்தியமாய் தெரியவில்லை

2 உங்கள் கருத்து:

')) said...

நாம் சந்தித்து விட்டுப் பிரியும் நேரம்
திரும்பிப் பார்க்கும் போதெல்லாம்
அழுகை வருகிறதென்றாய் - அன்று
முதல் திரும்பிப் பார்ப்பதில்லையென
சத்தியம் செய்து விட்டுப் பிரிந்தோம்
மறையும் கடைசி நொடியில் - நீ
பார்க்க மாட்டாயென நானும்
நான் பார்க்க மாட்டேன் என நீயும்
ஒன்றாய் திரும்பிப் பார்க்க
செய்த சத்தியம் எங்கேப் போனதென
சத்தியமாய் தெரியவில்லை

wow arumai arumai

')) said...

அசோக் இது நீங்க எழுதினதா???

பார்க்க - http://blog.arutperungo.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d_%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_2007

வருகைக்கு நன்றி!!!