Saturday, May 17, 2008

உனக்குள்

தொலைந்தே விட்டதோ என்று
இரவு முழுவதும் அழுதழுது உறங்கிப் போன மழலை
காலையில் கண் விழித்ததும்
தளையணை மேல் தன் பிரிய பொம்மையை கண்டு
மார்போடு அள்ளி அணைத்து
முத்த மழை பொழிந்து ஆனந்தக் கண்ணீரினால்
நினைத்து உள்ளம் நொகிழ்வதைப் போல்
ஒவ்வொரு முறையும் உன்னை விலகிபின் கூடும் பொழுதுகளில்
உன்னுள் புகுந்து எனதுயிர் மீள்கின்றேன் அன்பே!!

0 உங்கள் கருத்து:

வருகைக்கு நன்றி!!!