பூமி தினம் 1969-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இத்தினத்தை ஏழை பணக்கார நாடுகள் என்னும் வித்தியாசமில்லாமல் அனைத்து நாடுகளும் அனுசரித்து கொண்டிருக்கின்றன.கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 25 நாடுகளில் முற்றிலும் காடுகள் அழிக்கப்பட்டு விட்டன என வனமேம்பாட்டுக்கான உலக கமிஷன் தெரிவித்துள்ளது.இரண்டாம் உலகப் போருக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளி விவரக் கணக்குப்படி உலகில் 6 ஆயிரம் கோடி ஹெக்டேர் பரப்பளவிற்கும் குறைவாக இருக்கிறது.இதற்கு காரணம் மனிதனின் பயன்பாட்டிற்காக மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருப்பதேயாகும்.மேலும் காடுகள் அழிக்கப்படுவதால் அதிக அளவில் மனிதர்களுக்கு எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு உருவாவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதால் தான் எச்.ஐ.வி., கிருமிகள் உருவாகிறது.