Thursday, September 25, 2008

காதல் என்பது எது வரை?


கவிஞன் எதை காதலிக்கிறானோ, அதையெல்லாம் பாடுவான். ஒரு ஜெர்மானியக் கவிஞருக்கு தன்னோட மனைவி மேல காதல். தினம் நூறு வரில ஒரு கவிதை எழுதிடுவாரு. திடீர்னு ஒரு நாள் மனைவி இறந்துட்டாங்க. ஆனா அவர் தினசரி கவிதை எழுதறதை மட்டும் நிறுத்தலை. எழுதிட்டே இருந்தாரு. எழுதறதை தினம் மனைவி கல்லறையில கொண்டு போய் பாடிப் போட்ருவாரு. ஒருநாள், ஒரு மாசம் இல்லை. கிட்டத்தட்ட 44 வருடத்துக்கு இப்படி எழுதிட்டே இருந்த அவர் பேரு 'கார்ல் வில் ஹெல்ம்' நம்ம காதலிக்கிற ஆள் நமக்கு கிடைச்சாலும் சரி, கிடைக்கலைன்னாலும் சரி... கூட இருந்தாலும் சரி, இல்லேன்னாலும் சரி. நாம இருக்குற வரைக்கும் இருக்கிறதுக்கு பேர்தான் காதல்!

வீட்டு வரவேற்பறையில் எழுதி வைக்க

'பேசத் தகுந்த மனிதர் கிடைத்து, நீங்கள் பேசத் தவறினால், ஒரு தகுதியான மனிதரை இழந்து விட்டீர்கள். பேசத் தகுதியில்லாத மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தால், நீங்கள் உங்களையே இழந்து விட்டீர்கள் !'
கொஞ்சம் நீளமாக இருந்தாலும், வரவேற்பறைக்கு வர்றவங்களுக்கும் சரி உங்களுக்கும் சரி உபயோகமாக இருக்கும்.

Monday, September 15, 2008

திட்டம்

ஆயிரமாயிரம் மாலை
நேரங்கள் ஏதேதோ
பேசினோமே... வெட்டியாக
திட்டமிட்டுருக்கலாமே - அன்பே
ஒரு வேளை நாம் பிரிந்துவிட்டால்
எப்படி ஒருவரை ஒருவர் மறப்பது என்று

Monday, September 8, 2008

காதல் ஒரு மறதியா?

ஒரே நாளில்
எதிர்ப்பட்ட அழகியின்
முகம் மறந்துபோகலாம்
ஒரே வாரத்தில்
ரயில் சிநேகிதியின்
முகம் மறந்துபோகலாம்
ஒரே மாதத்தில்
கல்லூரித் தோழியின்
முகம் மறந்துபோகலாம்
ஒரே வருடத்தில்
பள்ளித் தோழியின்
முகம் மறந்துபோகலாம் - ஆனால்
எத்தனை யுகம் போனால்
உன் முகம் எனக்கு
மறந்துபோகும் என்னுயிரே!

Thursday, September 4, 2008

காதல் ஒரு முடிவு

கொல்
அல்லால்
எனைக் கொள்
கொல்லாது
கொள்வாயோ?
என் அன்பே
கொள்
அல்லால்
எனைக் கொல்
கொள்ளாது
கொல்வாயோ?
என் உயி(ரை)ரே

வருகைக்கு நன்றி!!!