நேரங்கழித்து வந்தாலும்
கோபிக்கிறாய்
நேரத்தோடு வந்தாலும்
கோபிக்கிறாய்
பரிசு வாங்கித் தந்தாலும்
கோபிக்கிறாய்
பரிசு வாங்காமல் வந்தாலும்
கோபிக்கிறாய்
பாடச் சொன்னாலும்
கோபிக்கிறாய்
பாடச் சொல்லாவிட்டாலும்
கோபிக்கிறாய்
வரவா என்று கேட்டாலும்
கோபிக்கிறாய்
அப்படிக் கேட்காவிட்டாலும்
கோபிக்கிறாய்
போகிறேன் என்றாலும்
கோபிக்கிறாய்
போகவில்லை என்றாலும்
கோபிக்கிறாய்
ஓ...
புரிந்துபோய்விட்டது!
நான் எப்போதும்
உன்முன்
கெஞ்சிக் கெஞ்சி...
உன்னை
இழுத்து இழுத்து...
அணைத்து அணைத்து...
முத்தமிட்டு முத்தமிட்டு...
செல்லம் செல்லம்
என்று
கொஞ்சிக்கொண்டே
இருக்க வேண்டும்
அப்படித்தானே?
அடடே
சிரிப்பைப் பாரு!!!
Saturday, August 23, 2008
கொஞ்சல்
Labels:
கவிதைகள்
Friday, August 22, 2008
இதயமாற்றம்
உனக்கு அன்று
நல்லவனும் நானே!
உனக்கு இன்று
கெட்டவனும் நானே!
எனக்கு அன்று
நல்லவளும் நீயே!
எனக்கு இன்று
கெட்டவளும் நீயே!
அடடா!!!
இப்படி மாறிய
இந்த நாட்கள்
எல்லாம் - உன்
இதயத்தின்
நிறமாற்றம்
தந்த புதிய
ரணக் கோலம்தானே?
Labels:
கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)
வருகைக்கு நன்றி!!!